திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை பல பெண்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளத் தயங்கும் சூழலில், விஜய் டிவியின் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் பகிர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கணவரின் கட்டாய உடலுறவு வற்புறுத்தலால் தனது திருமண வாழ்க்கையே சிதைந்ததாக அவர் கண்ணீருடன் கூறியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி அல்லது விவாகரத்துக்குப் பிறகு புதிய வாழ்க்கைத் துணையைத் தேடும் […]
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு சீரீன் சோனி பிளேஸ்கூலில், 5 வயது சிறுவனுக்கு ஆசிரியை அளித்ததாகக் கூறப்படும் கொடூரமான தண்டனை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அகதா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளேஸ்கூலில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது மகன் நர்சரி வகுப்பில் படித்து வருகிறான். சம்பவத்தன்று, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆசிரியையிடம் சிறுவன் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அனுமதி வழங்கப்படாததால், […]
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர், போன் பழுதானாலும் அல்லது புதிய போன் வாங்கினாலும் பழைய சார்ஜர்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். “சார்ஜ் ஆகுதே, பிரச்சினை என்ன?” என்று நினைப்பது சாதாரணம். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த சார்ஜர்களை நீண்ட காலம் பயன்படுத்துவது போன் மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 1. பேட்டரியின் ஆயுள் குறையலாம் ஒவ்வொரு போனுக்கும் அதற்கேற்ற மின்னழுத்தம் (Voltage) மற்றும் மின்னோட்டம் […]
சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் ஒன்று ஃப்ரிட்ஜ். உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படும் ஃப்ரிட்ஜின் மேல் பகுதியை பலர் கூடுதல் சேமிப்பு இடமாக பயன்படுத்துகின்றனர். பாத்திரங்கள், மசாலா பொருட்கள், மருந்துகள் என பல பொருட்களை அதன் மேல் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், சில பொருட்களை ஃப்ரிட்ஜ் மேல் வைப்பது அதன் தரத்தையும், வீட்டின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். 1. மருந்துகள் சிலர் மாத்திரைகள், சிரப் பாட்டில்கள் போன்ற மருந்துகளை […]
தண்ணீரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் வீணாகும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது. குறிப்பாக ஏர் கண்டிஷனரில் (ஏசி) இருந்து தினமும் வெளியேறும் தண்ணீரை பலரும் கழிவு நீர் என்று நினைத்து வீணாக்கி விடுகிறார்கள். ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்தினால் வீட்டின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த தண்ணீரை குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கோ பயன்படுத்தக் கூடாது […]
இன்றைய காலத்தில் வயது, வசதி அல்லது சூழ்நிலையை காரணம் காட்டி பலர் முயற்சியை கைவிடுகிறார்கள். ஆனால், வெற்றி என்பது வயதைப் பொறுத்தது அல்ல; மன உறுதியையும் உழைப்பையும் பொறுத்தது என்பதை சிலர் தங்கள் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டுகிறார்கள். கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உழைத்தால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற மிகப்பெரிய பாடத்தை, 76 வயதிலும் தனது உழைப்பால் வாழ்ந்து வரும் ஒரு பாட்டி அனைவருக்கும் உணர்த்தி வருகிறார். […]
திரையுலகில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பல நடிகைகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பெண்கள் தைரியமாக கருத்து தெரிவித்தாலே அவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழிவான விமர்சனங்கள் பதிவிடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் மனநிலை மாற வேண்டும் என்றும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை […]
கள்ளத்தொடர்பு, குடும்பத் தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை இன்று பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள் பலியாகும் அவலங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் தேனியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). […]
இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு மாணவர்களின் வாழ்க்கையில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே செல்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட கருத்து வேறுபாடுகளும் அதிகமாகி வருகின்றன. கண்டிப்பது அவசியம் என்றாலும், குழந்தைகளின் மனநிலையையும் புரிந்துகொண்டு பொறுமையாக பேசுவது மிகவும் முக்கியம். சிறிய பிரச்சினையாக தோன்றும் விஷயங்கள் கூட, சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) […]

