ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக சகோதரிகள் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த திருமணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஹசன்பூர் அருகே உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்களான 20 வயதான சரோஜ், 19 வயதான சாவித்ரி மற்றும் […]

தேனியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 60 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சணல் கயிறால் கழுத்து நெரித்து, தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ஓடைத்தெருவில் வசித்து வந்த 60 வயதான ராதா, வட்டிக்கு […]

தென்காசி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, சாலையை கடக்க முயன்றபோது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் 8 வயது மகள் ஜீவிதா, […]

காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை அனுமதியின்றி ஆபாச நோக்கத்தில் வீடியோ பதிவு செய்ததாக 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்த மாணவியை, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போல நடித்து அந்த நபர் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை அருகில் இருந்த மற்றொரு மாணவி கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவளின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை […]

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 65 வயது நபர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில், கமலா என்ற நர்ஸ் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அந்த மருத்துவரிடம் “உன்னை பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பேன் என்றும், உனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன்” என்று மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மருத்துவருக்கு […]

காலை நேரம் என்றாலே பல வீடுகளில் முதலில் கேட்கும் சத்தம் குக்கரின் விசில் தான். குழந்தைகளின் டிபன், அலுவலகம் செல்லும் பெரியவர்களின் மதிய உணவு, வீட்டில் தினசரி சமையல் என எல்லாவற்றிலும் பிரஷர் குக்கர் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இன்று பல புதிய சமையல் சாதனங்கள் வந்தாலும், விரைவாகவும் சுலபமாகவும் உணவு சமைக்க பிரஷர் குக்கருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறையவில்லை. ஆனால் புதிய குக்கர் வாங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வரும் குழப்பம் […]

காலை வேகமாக கிளம்பும் அவசரம், அலுவலக நேரம், பள்ளி நேரம் என இன்றைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால், காலை சமைத்த உணவை மதியம் வரை சூடாக வைத்திருக்க ஹாட் பாக்ஸ், தெர்மல் கன்டெய்னர் போன்ற சாதனங்கள் பெரும்பாலான வீடுகளில் இடம்பிடித்துள்ளன.ஆனால், இந்த வசதிகள் இல்லாத காலத்தில் நம் பாட்டி, தாத்தாக்கள் எப்படி உணவை பாதுகாத்தார்கள்? மின்சாரம் இல்லாமல், நவீன உபகரணங்கள் இல்லாமல், பல மணி நேரம் உணவை சுவையுடன் […]

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், மாடலாகவும் அறியப்படும் சனம் ஷெட்டி, பல திரைப்படங்களில் நடித்ததுடன், சமூக விவகாரங்கள் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும்போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக […]

நாட்டில் மனிதநேயம் மெல்ல மெல்ல சிதைந்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களையும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி, அதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி, சில சம்பவங்களில் கொலை செய்யப்படும் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இதையெல்லாம் விட, விலங்குகளையே பாலியல் வன்கொடுமைக்கு […]

குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை, கருத்து வேறுபாடுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் போன்ற காரணங்களால் குடும்பங்களில் கடும் விரிசல்கள் ஏற்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சில நேரங்களில் இத்தகைய மோதல்கள் வன்முறை, தற்கொலை, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களாக மாறி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி ராஜபாளையத்தை […]