திருப்பதி திருமலையில் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற தோள்மேல் சுமந்து கொண்டே படிக்கட்டுகளை ஏறிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடியப்புலங்காவை சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா . அவருடைய மனைவி லாவண்யா . இருவருக்கும்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு மகன் பிறந்தநாள் மலை ஏறி வருவதாக திருப்பதி ஏழு மலையானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் […]

மனைவியிடம் மாத சம்பளம் எவ்வளவு என கணவன் தெரிவிக்காததால் சட்டத்தை நாடி தெரிந்துகொண்டுள்ளார். சில கணவன்மார்கள் தனது சம்பளம் குறித்த தகவலை மனைவியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை திருமண உறவு முறியும் தருவாயில் வழக்கறிஞர் மூலம் கேட்டுப் பெறலாம். ஆனால் கணவனுடன் வாழும் நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவலை கணவன் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கும் வழி உள்ளது. அது தான் ஆர்.டி.ஐ. சட்டம் . சஞ்சு குப்தா என்பவர் […]

மஹாராஷ்டிராவில் வீட்டில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடிரென பைக் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மஹாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது 7 வயது சிறுவன் ஷபீர் அன்சாரி என்ற சிறுவன் ஸ்கூட்டர் அருகில் நின்றிருந்தான். அன்சாரியின் பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றார். அன்சாரியின் தந்தை ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட ஸ்விட்ச் போர்டில் கனெக்ட் […]

பீகார் , மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம்  மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 6ம் தேதி வாக்கு […]

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் இரத்த வகை ஆரம்பகால பக்கவாதம் ஏற்படும் […]

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது,​​அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஏனெனில், இவை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, ஆற்றலையும் அளிக்கிறது.பல பழங்கள் நாள்பட்ட நோய்க்கான […]

  இந்தியாவில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முடிந்து ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளன. இதில்இந்திய அணியில் சில மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்தியாவில் டி.20 தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகின்றது. இதைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்தி அணி விவரங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. டி.20 தொடரில் விளையாடும் நபர்கள் […]

கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான போட்டியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றபோது பாம்பு மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் 2-வது டி20 போட்டி தொடங்கியபோது திடீனெ பாம்பு புகுந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தொடங்கியது. ரோகித் மற்றும் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினர். 7வது ஓவர் விளையாட்டின்போது கே.எல் ராகுல் ஏதோ வருகின்றது என அறிந்து தென்னாப்பிரிக்க வீரர்களைஅங்கிருந்த […]

சிறையில் உண்ணாவிரதம் இருந்து  வந்த சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைஅடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர்  சிறையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக சவுக்கு உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார். சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடாமல் இருந்து வந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பற்றி விமர்சனம் […]

சென்னை மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பதிமூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவாயல் வேல் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரின் மூத்த மகள் பூஜா (13) . விருகம்பாக்கத்தில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  காய்ச்சல் இருப்பது உறுதியான […]