தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. […]
இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டியது தான் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு […]
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ( 40) என்பவர் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பிரசிக்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு […]
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு , கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்த தேவதாசன்(40), கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி சினிமா கேமராமேனாக பணியாற்றி வந்தார். அவர் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் […]
அரசு மருத்துவமனையில் மாத்திரயை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்- பரபரப்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மருந்தகத்தில் மாத்திரையை மாற்றிக்கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புது கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் – சிந்து தம்பதியின் 45 நாள் குழந்தைக்கு கடந்த 31ஆம் தேதி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி […]
பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 39. பெங்களூருவில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் நிதின் வசித்து வந்தார் . இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, நிதின் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பிரபல புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகனான […]
10ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12,828 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18-40 பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (3 […]
ஒடிசா மாநிலம் பாலசோர் எனும் இடத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு […]
ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்று கோவலத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணாமலை, இலக்கு 2024: தெற்கில் வெல்லப்போவது யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பேசினார். அப்போது “ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறுவது […]