‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026’ (Swachh Vayu Sarvekshan 2026) ஆய்வின்படி, தற்போது இந்தியாவில் லக்னோ தூய்மையான காற்று கொண்ட நகரமாகத் திகழ்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் இது 198 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் நொய்டா 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்கள் முறையே 32, 35 […]

கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் அறிமுக நிகழ்வுக்கான மேடை தயாராகி வருகிறது. சில மணி நேரங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஐபோன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்த ஆண்டு ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone – ஐபோன் டுஓ) ஆகியவை முக்கியக் கவனத்தைப் […]

ஜப்பானின் நாகோயா நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அங்கு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நகரில் ஒரே மணி நேரத்தில் சுமார் 104 மி.மீ மழை பதிவானதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்தனர். இதனால் அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். கப்பல் கொள்கலன்களிலிருந்து தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கார்டன் பியர் […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் இரண்டு (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) தொகுதிகளில் வென்றதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான பரபரப்பு அடங்குவதற்குள், […]

2024ஆம் ஆண்டு தவெக கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தனக்கு ஆதரவு தந்த பெண்கள் ,இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் விஜய். அதில் ஒன்று தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். அரசு மருத்துவ மனைகளில் புதிதாகப் […]

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட தங்குமிட வசதிகள் குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடையே திருப்தியின்மை நிலவி வந்தது. இந்தியாவைப் போலவே வேறு சில நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்தன. இருப்பினும், விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தங்குமிடம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் தாங்கள் திருப்தியடைந்துள்ளதாகவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் […]

அரசியல் தலைவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அமைச்சரவைக் கொண்ட இந்த நாட்டில், தற்போது இந்த ஊதிய உயர்வு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அடிப்படை ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்) 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (27 […]

பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான (NATS) விமானச் செயலாக்க முறைமையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இங்கிலாந்து முழுவதும் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்களும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 132 விமானங்களும் மற்றும் பல்வேறு […]

பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகத் திரிசூலி பள்ளத்தாக்கில் […]

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் 6 அன்று நொய்டா செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில் சிலிங் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலின் அருகில், தற்கொலைக்குக் காரணமான மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பிடும் […]