இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்.13 ஆகிய தேதிகளில்) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சுமார் 1,300 சர்வதேசச் செய்தியாளர்களுக்கு, இந்தியப் பாரம்பரியத்தையும் கைவினைப் பொருட்களையும் பறைசாற்றும் வகையில் 9 சிறப்புப் பொருட்கள் அடங்கிய அன்புப் பரிசுப் பை வழங்கப்படுகிறது. இந்த சிறப்புப் பையில் இந்தியாவின் உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், […]

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்ட வரைவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதன் மூலம் எச்-1பி, எல்-1 உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் விதிகளின்படி, எச்-1பி […]

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சுஸுகி கோப்பை’க்காக நடத்தப்படும் இப்போட்டி, ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 22 அன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தியா – ஜப்பான் இடையிலான […]

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட தகுதி வரம்புகள் குறித்த சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள முடியும். இந்த விதியை ஒருவருக்காக மட்டும் தளர்த்த முடியாது […]

தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார். பேச்சாற்றலாலும் இயல்பான நகைச்சுவையினாலும் பட்டிமன்றக் கலையைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குன்றக்குடி அடிகளாரின் […]

BRICS நாடுகள் உலக மக்கள் தொகையில் சுமார் பாதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 25 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், பியூஷ் கோயல் மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் வர்த்தகத்தை அதிகரித்தல், சந்தைகளைத் திறந்துவிடுதல், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அமெரிக்காவின் […]

2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் […]

சீனாவின் கிழக்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள குயிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில், பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சரக்குக் கப்பலில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஓஷன் மெலடி’ (Ocean Melody) என்ற சரக்குக் கப்பல், ‘சீனா ஸ்டேட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்’ நிறுவனத்தின் பழுதுபார்க்கும் தளத்தில் பராமரிப்புப் […]

அசாம் மாநிலம் நுமாலிகர் பகுதியில், காட்டு யானை ஒன்றின் கழுத்தில் மிகப்பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர். வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே வனத்துறையினரும், வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமும் (CWRC) இணைந்து உடனடியாகச் செயல்பட்டனர். யானையின் கழுத்தில் இருந்த டிராக்டர் […]

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026-ன் முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 64 ரன்கள் […]