fbpx

நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை.. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். …

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சி தான். எப்போது தேர்தல் நடந்தாலும் …

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது, ​​நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர், அந்த வகையில், மகா கும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13ஆம் தேதி முதல் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. நீர் மாசுபாடு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் …

இளநீர், இருமல் மருந்து, ஹோமியோபதி மருந்துகளை அருந்திவிட்டு பணிக்கு வரக்கூடாது என ரயில் ஓட்டுநர்களுக்கு தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு வரும் போதும், பணி முடிந்து செல்லும்போதும் இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், …

தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் …

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சரின் பிறந்த நாளை மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் …

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறது. இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தற்போது நிர்வாகிகள் நியமனம், மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மார்ச் …

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தாய் – தந்தை இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய நிலையில், குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. இது போன்ற சூழலில், குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், குழந்தைகள் சிறு வயதில் இருந்து செல்போன் …

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், தற்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றிய உடன் அருகில் உள்ள தனியார் பள்ளி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் …

கணவர் கண்முன்னே வடமாநில பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், தனது கணவருடன் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றுவது பிடிக்காததால், மீண்டும் தங்களது சொந்த …