அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மருந்துகள், சிகிச்சைகள் என அனைத்தும் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் […]

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரமிளா என்ற தீபிகா. இவருக்கு வயது 24. கடந்த ஒரு மாதமாக இவரை காணாததால், அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதுதொடர்பான விசாரணையில், அவர் […]

பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த கே.பாலுவை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து […]

நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் ஆசை விஜய்க்கும், […]

”உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. ஆனால், விந்தணு தானம் மூலம் மட்டும் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று சமூக வலைதளத்தில் ஒரு பெண் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். ரெடிட் சமூக வலைதளத்தில் பெண் ஒருவர், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். முதலில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஆனால், குழந்தைக்கு 2 வயது ஆனவுடன், […]

இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய […]

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]

ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) என மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மேலும், இந்த தேர்வு […]