மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் காலை நேரங்களில் படுக்கையை விட்டு எழுவது சவாலாகவே இருக்கிறது. வெளியில் இருந்து வரும் குளிர் காற்று, அதோடு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய நிலை என்றால், அதை நினைத்தாலே சிலருக்கு சிலிர்க்கும். இந்நிலையில், பலரும் வெந்நீரில் குளிப்பதை ஒரு வசதிக்கேற்ப செய்த செயலாகவே பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதே நேரத்தில், சில பக்கவிளைவுகளும் உண்டு. அவற்றைப் […]
நாட்டில் மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும், பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவிகள் கர்ப்பம் ஆகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தான், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அழைத்துக் கொண்டு பெற்றோர், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு […]
நீங்கள் ஒழுங்காக டயட் பின்பற்றியும், தவறாமல் ஜிம்முக்கு சென்றாலும், இனிப்பை தவிர்த்தாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கிறதா..? இது தனிப்பட்ட விஷயமல்ல. பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான சிக்கல்தான். உடல் எடையை குறைக்கும் செயல்முறை என்பது வெறும் கலோரி குறைக்கும் முயற்சி மட்டும் அல்ல. உங்கள் தூக்கம், மன அழுத்தம், அன்றாட பழக்க வழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளது. காலை உணவை தவிர்ப்பது : ஒரு நாளின் முக்கியமான […]
மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த சூர்யன்ஷ் கோச்சார் (வயது 18) தனது முன்னாள் ஆசிரியை (வயது 26) மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்கள் பிற்பகல் 3:30 மணி அளவில், ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென அவரது வீட்டிற்கு வந்த சூர்யன்ஷ், பெட்ரோல் […]
நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படும் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் […]
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணியின் பெயர் : Customer Service Associates (Clerk) மொத்த காலியிடங்கள் : 10,277 பணியிடம் : இந்தியா முழுவதும் (தமிழ்நாடு – 894, புதுச்சேரி – 19 காலியிடங்கள்) கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். […]
நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]
“சளி, காய்ச்சல் வந்தால் ஆவி பிடி.. வியர்வை வந்தா எல்லாம் பறந்து போய்ரும்” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில், வியர்வின் பங்களிப்பு நம் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போதும், உடலால் வெளியேற்ற வேண்டிய நச்சுகள் குவியும் போதும், வியர்வாகவே அவை வெளியேறும். இதை இயற்கையின் ஒரு சுத்திகரிப்பு செயலாகவே பார்க்கலாம். உடல் நச்சு : நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இதய நலம் குறித்து நாம் எடுத்துக்கொள்ளும் கவனக்குறைவுகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதற்கு முக்கியமான பங்கு வகிப்பது கொழுப்பு தான். உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது தமனிகளில் தங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால், வாழ்கைமுறை மாற்றங்கள் சில, இந்த […]