புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் அருகே பாண்டி மெரினா செல்லும் சாலையில் நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில், கொலையானவர் ரெட்டியார்பாளையம் […]

நியூசிலாந்தில் புகழ்பெற்ற உணவக நிறுவனமான ஹெல் பீட்சா (Hell Pizza) கடந்த 2023 ஆம் ஆண்டு உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் பீட்சாவை உடனடியாக ஆர்டர் செய்து உண்ணலாம், ஆனால் அதற்கான கட்டணத்தை அவர்கள் இறந்த பிறகு செலுத்தினால் போதும் என்ற திட்டமே அது. இந்த திட்டம் “ஆஃப்டர்லைஃப் பே” (After Life Pay) என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த திட்டமானது, […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மையமாக விளங்கும் ஒருங்கிணைந்த UPI சேவையின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் நவம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளில் 10 செட்டில்மென்ட் சுழற்சிகளில் வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த/ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் கையாளப்பட்டன. மாதந்தோறும் பில்லியன் […]

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்களிடையே தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பெஞ்சமின், கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழகத்தின் முதல்வராக உருவெடுப்பார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவரது வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படிப்பட்ட […]

இந்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்ற தூய்மை ஆய்வு அறிக்கை, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுகாதார நிலையை அளவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வானது நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்கி, தூய்மையான இந்தியாவை நோக்கிய நகர்வை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் […]

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து […]

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினமானது, பல ஆன்மீக முக்கியத்துவங்களை கொண்டது. குறிப்பாக, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனித நாளாக இது கொண்டாடப்படுகிறது. அகிலத்தின் தந்தையாக விளங்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி முழுவதும் சமைத்த அன்னத்தால் முழுவதுமாக மூடப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது இந்த நாளின் தனிச்சிறப்பு. இந்த அன்னாபிஷேக தரிசனம் காண்பதால், ஒரே நேரத்தில் கோடி லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த அன்னம், […]

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் அலிகர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார், தனது மனைவி ரூபி மற்றும் 3 குழந்தைகளுடன் கர்ஹி சௌகாண்டி கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். அதே பகுதியில் ராகுல் (36) என்பவரும் வாடகைக்கு தனியாக வசித்துள்ளார். ரூபியும் ராகுலும் ஒரே தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளனர். இதனால், ராகுல் தினமும் ரூபியைத் தனது பைக்கில் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தினமும் காலையிலும் மாலையிலும் அமித்தின் […]

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்ற இளம்பெண், ‘ஹனிடிராப்’ (Honeytrap) என்னும் வலையை விரித்து 300-க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி, வீடியோக்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் குறிவைத்து இவர் பல தந்திரங்களை மேற்கொண்டதாகவும், 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தித் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் வாடகைக்கு ஓட்டி வந்தவர் அலாவுதீன். இவர், ஓராண்டுக்கும் மேலாக காணாமல் போனதாக அவருடைய மனைவி சுமையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அலாவுதீனை எங்கு தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அலாவுதீனின் தம்பி ஹாரிஸ், ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார். “நீ என்னுடைய அண்ணியுடன் தவறான […]