உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கன்ச் பகுதியைச் சேர்ந்த அனில் என்பவர் தனது தாய்மாமா மகள் அனிதாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அனில் தனது மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சினுடன் ஹரிதுவா கிராமம் அருகே உள்ள ஓம் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அனில் அங்கு டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காலை, அனிலும் அவரது தம்பியும் வழக்கம் போல […]

சொந்த வீடு கனவுடன் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2025-26ன் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், வீடு கட்டுவதற்காகக் கூடுதலாகக் கடன் பெற வசதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு “லோன் மேளா” முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டுக்காக மொத்தம் 1,700 […]

பொதுவாகப் புகைப்பிடித்தல் என்றாலே நுரையீரல் புற்றுநோய் அல்லது இதய நோய்தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களால் நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்படும் மற்றொரு முக்கியமான உறுப்பு வாய் ஆகும். பல ஆண்டு ஆய்வுகள், புகைப்பழக்கம் என்பது பல் சிதைவு, ஈறு நோய்கள், பல் இழப்பு, பல் சிகிச்சைகள் தாமதமாகக் குணமாகுதல் மற்றும் மிக முக்கியமாக வாய்வழி புற்றுநோய்கள் உள்ளிட்ட பல ஆபத்துகளைப் பன்மடங்கு அதிகரிப்பதாக எச்சரிக்கின்றன. […]

தமிழ்நாட்டில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த சூழலில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, எதிர்மறை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டைப் போலவே, பல தீவிரமான மற்றும் அதி தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என்று […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (33). இவர் ஒரு பைனான்சியராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27), அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கர்நாடக மாநிலக் கிளை அலுவலகத்தில், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் (25) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் […]

சென்னை அசோக் நகர் 4-வது பிரதான சாலையில் நேற்றைய தினம் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் இளைஞர் ஒருவரும், அவரது பெண் தோழியும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென காரின் கதவைத் திறந்து அந்த இளைஞரை வெளியே இழுத்துப் போட்டு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் அவரது மார்பில் சரமாரியாகக் குத்தி […]

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான், உலக அரங்கில் தனித்துவமான அரசுக் கொள்கைகளுக்காக அறியப்படுகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய நாடு, தனது குடிமக்களுக்குக் கல்வி, மருத்துவம், வீடு மற்றும் மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. பூடானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அரசு, உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்குச் சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது. பூடானில் […]

தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன், கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், சமீபத்தில் அறிவித்த 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில், கட்சியின் முக்கியப் பதவியான பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம்பெறாதது, கட்சி வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் […]

திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று, மாது நீண்ட […]