மனித குலத்திற்கு கிடைத்த அருமையான மூலிகைகளில் ஒன்று கறிவேப்பிலை. முருங்கைக்கீரைக்கு அடுத்தபடியாக உணவில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A, B, C, E, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கறிவேப்பிலையை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் சத்துக்கள் கிடைக்கும் என்றாலும், அதனை தண்ணீரில் ஊறவைத்து அருந்துவதன் மூலம் பல மடங்கு கூடுதல் பலன்களைப் பெறலாம். உடல் எடை குறைப்பு : […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பை வளர்த்துள்ளார். பெற்றோரை இழந்த அந்த மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், “நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.. உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று ராகுல் ஆசை […]

90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரை சீரியல்கள், வெப் சீரிஸ் என காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்ட சீதா, தற்போது தனது சமீபத்திய தோற்றத்தால் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார். சீதா தனது திரைப்பயணத்தை 1985-ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் […]

மாரடைப்பு மற்றும் திடீர் இதய அடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளுக்கு முக்கிய காரணம், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் நாளடைவில் ரத்த குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது ‘பெருந்தமனி தடிப்பு’ என்ற நிலை ஏற்படுகிறது. இந்த நிலை பொதுவாக எந்தவிதமான பெரிய ஆரம்ப அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. ஆனால், நிலைமை மோசமாகும் முன் சில முக்கிய அறிகுறிகளை உடல் நமக்கு […]

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ஒரு பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் இடிக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதீன மடாதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மயிலாடுதுறை மயூரநாதர் வடக்கு வீதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1943 ஆம் ஆண்டு, தருமபுரம் ஆதினத்தின் 24-வது மடாதிபதி […]

தமிழ் சினிமாவின் பிரபலமான தம்பதிகளான நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் குறித்து தற்போது ஒரு பரபரப்பான விவாதம் பேசப்பட்டு வருகிறது. 90-களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். சமையல் திறமையாலும், கோமாளிகளுடன் அவர் காட்டிய பாசத்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரியா ராமன், எதிர்பாராத விதமாக […]

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வயதான அமெரிக்கர்கள் மத்தியில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை காட்டுகின்றன. அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் பழக்கம் மது மற்றும் புகையிலை போதைப் பழக்கத்தை விடவும் அதிகமாக பரவியுள்ளது. இது கட்டாய உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் செயற்கை சேர்க்கைகள் நிறைந்த இந்த […]

தமிழ்நாடு அரசால் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டாலும், இன்னும் ஏராளமானோருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தகுதியுடைய பெண்கள் மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் […]

கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]

உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளார். எவரெஸ்டுக்கு தெற்கே நேபாளத்தில் அமைந்துள்ள மேரா சிகரத்தின் (Mera Peak) உச்சிக்கு அருகில், பனிப்புயலில் சிக்கி ஒரு தென் கொரிய மலையேற்ற வீரர் உயிரிழந்ததாக நேபாள மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியது. சுமார் 21,250 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தின் […]