பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெலத்தூர் பகுதியில், கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், ஒரு கொடூரமான பழிக்குப் பழி கொலைச் சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த விஷால் (25) மற்றும் ரூபி […]

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – சாந்தா தம்பதியின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷ் மின்சாரம் தாக்கிய விபத்தில் கை கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார். பி.ஏ. படித்து வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தின் மொத்தச் சுமையையும் சுமந்த உஷா, ஒரு காபி ஷாப்பில் ரூ.15,000 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இரண்டு தங்கைகளின் திருமணம் மற்றும் வீட்டை மீட்க […]

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம், முர்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பதிவு செய்யக் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், நடைமுறைகளை எளிதாக்கவும் பத்திரப்பதிவுத் துறை புதிய டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்டத் திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு […]

இன்றைய காலக்கட்டத்தில் நிலையான மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது என்பது தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்வதில் தான் உள்ளது. நிதி ஆலோசகர்கள் பொதுவாக மொத்தமாகப் பணம் போடுவதைவிட, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் முதலீடு செய்யவே அதிகம் பரிந்துரைக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதால் தான். SIP-யின் சிறப்பு என்ன..? SIP மூலம் முதலீடு செய்யும்போது, மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகளை […]

இந்தியாவில் திருமணம் செய்வதற்குரிய சட்டப்பூர்வ வயதை (ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18) இன்னும் எட்டாத நிலையிலும், பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய வயது வந்த இருவரும் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழலாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒருவரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, அவர் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காக மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. கோட்டாவைச் சேர்ந்த 18 வயது […]

விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் […]

இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]

தற்போது நிலவும் அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ (Facial Paralysis) எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். முகவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முகவாதம் என்றால் என்ன? முகத்திற்கு உணர்வை அளிக்கும் முக நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது வைரஸ் தொற்று போன்றவற்றால் உருவாகும் பாதிப்புதான் […]

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, […]