மத்திய பட்ஜெட் 2023 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று அறிவித்தார். இதுவரை 2.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு வரி கிடையாது என்று நடைமுறை இருந்தது. 2.5லட்சத்திலுருந்து 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 5சதவீத வரியும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய வரிமுறையை பின்பற்றுபவர்களுக்கு […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் பரபரப்புக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போன்றவர்களைத் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் […]

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்ததோடு, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 3தலைநகரை அமைக்கவும் முயற்சிகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள […]

மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வாரியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் […]

பிபிசி-யின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவணப்படம் குறித்து பிபிசி வெவ்வேறு முனைகளில் “தகவல் போரை நடத்துகிறது” என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி 2 பாகங்களாக சில நாட்களுக்கு முன் வெளியிடட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா […]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 3:40 மணியளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்டுகிறது. சுனாமி எச்சரிக்கை போன்றவை விடுக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் மணிப்பூர் […]

நாளை முதல் பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்று தெரிந்து கொண்டு கவனமாக இருப்பது நல்லது. ஏனென்றால் சிலர் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் முன் கூட்டியே உங்களது வங்கி சேவையினை திட்டமிட்டு செய்து கொள்ள முடியும். அதன்படி பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்ந்து 9 […]

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை […]

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அந்த பகுதிக்கு சென்று காரில் இருந்து […]

முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்வன்ற U19-மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா பௌலிங்கை தேர்வு செய்தார். அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் […]