முன்பெல்லாம் இருவருக்கிடையில் பிரச்சனை என்று வந்து விட்டால் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று நினைத்தார்கள்.
ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், முந்தைய தலைமுறையினர் இடையே பொறுமையும், நிதானமும் இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிக்க தவறி விட்டார்கள். அதன் காரணமாக, பல அசம்பாவிதங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றனர்.
ஆனால் பொறுமையை கடைபிடித்து வந்த முந்தைய தலைமுறையினரே தற்போதைய இளம் தலைமுறையினருக்கு பொறுமையாக ஆலோசனை கூறாமல் தவறு செய்வதற்கு பக்கபலமாக இருந்தால் என்ன நடக்கும்?
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (53). இவர் ஒரு விவசாயி, மேலும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர்.
இவருடைய மனைவி வனிதா (42) இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம் (25) என்ற மகனும், ஸ்ரீமதி (22) என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் திருஞானசம்பந்தத்திற்கும், அவருடைய அண்டை அண்டை வீட்டாறான ராஜேந்திரன் என்ற நபருக்கும் பல வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்திருக்கிறது. இதனால் ராஜேந்திரன் திருஞானசம்பந்தத்தை சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய குடும்பத்தினருடன் வந்து தாக்கி இருக்கின்றார்.
இதனால் கோபமடைந்த திருஞானசம்பந்தம் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகனான மணிகண்டன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில், இவர்கள் 2 பேரும் சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
வெளியில் வந்த தந்தையும் மகனும் தங்களை சிறைக்கு அனுப்பிய திருஞான சம்பந்தத்தின் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில், ஒருநாள் திருஞானசம்பந்தம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை வழிமறித்த ராஜேந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் அவரை அறிவாளால் சாரமாறியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் திருஞான சம்பந்தம் போராடிக் கொண்டிருந்தார்.
அவரை வெட்டி சாய்த்து விட்டு ராஜேந்திரன், மணிகண்டன் உள்ளிட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழபுரம் காவல்துறையினர் திருஞானசம்பந்தத்தின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தை ராஜேந்திரன், மகன் மணிகண்டன் உள்ளிட்டோரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.