பொது மக்கள் கவனத்திற்கு : இந்த தேதியில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், “வங்கி ஊழியர்கள் குறித்த பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றது. இரு தரப்பில் இருந்தும், கலந்து ஆலோசனை செய்யாமல் மேம்போக்காக முடிவுகளை எடுக்கின்றனர்.

விதிமுறைகள் பலவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கின்ற உத்தரவுகளை வங்கி நிர்வாகங்கள் எப்பொழுதும் கடைபிடிப்பது இல்லை.

பணியாளர் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே இருக்கும் உறவை அலட்சியமாக கையாளுகிறார்கள். இதன் காரணமாக, வரும் நவம்பர் 19ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

கூட்டணி கணக்கு ; தமிழகம் வரும் மம்தா பானர்ஜி., கைகொடுக்குமா திட்டம்.?

Wed Nov 2 , 2022
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இப்போதே ஈடுபட துவங்கிவிட்டனர். கூட்டணி பேச்சு வார்த்தைகள், மக்களுக்கான திடீர் அறிவிப்புகள் என்று பரபரப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்க பல முன்னணி கட்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தமிழகத்திற்கும் வர உள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் வீட்டில் நடக்கும் […]
41 MLA-க்கள் நேரடி தொடர்பு..! கைதாகிறாரா மம்தா..? பாஜக தலைவரின் பேச்சால் அரசியலில் பரபரப்பு..!!

You May Like