உஷார்..!! உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்யப்போறீங்களா..? பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!!

உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 26 வயதான இவர், உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்தார். ஹேமச்சந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது தொடர்பாக சென்னை பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பிறப்புறுப்பில் எண்ணெய் மசாஜ் செய்தால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

'மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது' - அமைச்சர் ஜெய்சங்கர்

Wed Apr 24 , 2024
ஹைதராபாத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசியவாத சிந்தனையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில்,  “பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது. கொரோனா காலகட்டத்திலும், உக்ரைன் போர், இஸ்ரேல் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இந்திய மக்களவைத் தேர்தல் மீது கருத்துகள் என்ற […]

You May Like