தற்போதைய இளைஞர்கள் தாங்கள் நினைக்கும் அனைத்தும் நடந்து விட வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மையில் இருந்து வருகிறார்கள்.
தாங்கள் நினைப்பது நடந்தே தீர வேண்டும், அப்படி நடக்கவில்லை என்றால் அதனை நடத்தி காட்டுவதற்கு எந்த விட எல்லைக்கும் செல்வதற்கு ஆயத்தமாகவே இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. அதாவது, பிரசிடென்சி கல்லூரியில் பி டெக் படித்து வரும் ஒரு 19 வயது மதிக்கத்தக்க மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். அப்போது கல்லூரி வளாகத்திற்கு நுழைந்த ஒரு இளைஞர் அவர் மறைத்து வைத்து எடுத்து வந்த, கத்தியை வைத்து அந்த மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நிலையில் மாணவியை குத்திய பின்னர் அதே கத்தியை வைத்து தன்னை தானே அவர் குத்திக் கொண்டார்.
இந்த நிலையில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்ட சக மாணவர்கள் கல்லூரி பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவசர உறுதி வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மாணவியை கொலை செய்த இளைஞர் மார்பில் ஆழமான கத்தி குத்து காயம் உண்டாகி தற்சமயம் ஆபத்தான சூழ்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த இளைஞரின் பெயர் பவன் கல்யாண் எனவும், பெங்களூருவில் இருக்கின்ற மற்றொரு கல்லூரியில் அவர் பிசிஏ படித்து வந்ததும் பெரிய வந்தது இரண்டு பேரும் கோலார் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்த மாணவியை கொலை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் கல்லூரிக்கு வந்திருக்கிறார். மேலும் தன்னுடைய காதலை நிராகரித்து விட்டு வேறொரு மாணவரை காதல் செய்த மாணவியை ஆத்திரத்தால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் கூட இந்த கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று இதுவரையில் அறியப்படவில்லை என்று காவல்துறையினரின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.