பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஜனனியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.


ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நாட்கள் செல்ல, செல்ல அவர் மீது இருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கிவிட்டது. காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாட்டில் கவனக்குறைவாக இருந்தது தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே தான் வெளியேறப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்வதைப்போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வகையில் ஜனனி இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் வரையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த ஜனனி ஒரு நாளைக்கு 21 முதல் 26 ஆயிரம் வரையில் சம்பளம் பேசப்பட்டு பங்கேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம்... திறப்பு விழாவிற்கு முன் இடிந்து நொறுங்கியது...!

Sun Dec 18 , 2022
பீகார், பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் நதியின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலை போராட்டங்கள் முதல் சட்டசபை வரை தங்கள் கோரிக்கையை வலுவாக எழுப்பினர். 2012-13ம் ஆண்டு, பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. 14 கோடி செலவில் 206 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. […]
gandak river bihar bridge collapse

You May Like