தமிழகத்திற்கு வேலை தேடி வந்திருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவத் தொடங்கினர். அதோடு, வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த விவகாரம் பீஹார் மாநில சட்டசபையில் நேற்று எதிரொலித்தது இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த பிரச்சனையை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக புகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான 4️ பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.இந்த குழுவில் நுண்ணறிவுப் பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஸ்ரீ அலோக் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பாலமுருகனும், கண்ணனும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இந்த குழுவினர் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். அதோடு, பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் உரையாற்றுவதுடன், பிகார் மாநில தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உள்ளூர் அதிகாரியிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோல பிஹார் மாநில அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறது.