மத்திய அமைச்சரின் காரில் மோதி பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக தொண்டர் பலி..!! பெரும் பரபரப்பு..!!

பெங்களூருவில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே கார் கதவில் இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). பாஜக தொண்டரான இவர், பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கே.ஆர்.புரம் விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் கார் கதவு திறந்திருந்தது. அப்போது பிரகாஷின் இருசக்கர வாகனம் கார் கதவு மீது மோதியதில் அவர் சாலையில் தடுமாறி விழுந்தார்.

அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்து பிரகாஷ் மற்றும் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பிரகாஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் ஷோபா கரந்தலஜே, இந்த விபத்து குறித்த விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் காரில் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Chella

Next Post

மக்களே செம குட் நியூஸ்..!! அடுத்த ஒருவாரத்திற்கு குளுகுளு அறிவிப்பு..!!

Mon Apr 8 , 2024
தமிழ்நாட்டில் நடப்பாண்டு கோடை காலத்தில் வெப்பநிலையானது அதிகபட்சமாக பதிவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை குறிப்பிட்ட இடங்களில் மழை […]

You May Like