காணாமல் போன சிறுவன்.. அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

ஜராத் மாநில பகுதியில் உள்ள , ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.


இவர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் பற்றிய விசாரணையில் காவல்துறையினர் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை அன்று இரவில் சிறுவன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், வெகு நேரம் ஆகிய பின்பும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் வேலை செய்யும் பண்ணை அருகில் தேடி சென்ற போது சிறுவனின் சடலம் கிடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. 

மருந்து பரிசோதனையில் சிறுவனின் உடலில் இருந்த காயங்கள், கரும்பு வெட்டப் பயன்படுத்தும் கொக்கியை வைத்து சிறுவனின் தலையில் தாக்கியியுள்ளனர். அத்துடன் சிறுவனின் அந்தரங்க உறுப்பையும் வெட்டியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

1newsnationuser5

Next Post

#சென்னை : தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகள்.. திடீரென வந்த ரயிலில் பலி..!

Fri Dec 9 , 2022
கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது அங்கு திடீரென்று வந்த ரயிலால் […]
n4501120301670565788566a3d364c2dd09e1ab1242655aeba532619342c4723b6d961813c2791b0243d650

You May Like