காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது..
2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இந்த சூழலில் காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்..
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 300 கில்லோ எடையை தூக்கி ஜெரிமி முதலிடம் பிடித்தார்.. இதனால் இப்போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.. பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.. எனவே காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 2 தங்கப்பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது..