தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது.. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களை பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று ஆணையிட்டார்..
இதையடுத்து தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.. அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 2716 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது..
இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. சென்னையில் 12 உட்பட மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப்படை காவல்நிலையங்கள் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : திமுக, அதிமுக இணைந்து என்னை முதல்வராக்குவதற்கு பேசினர்.. திருமா பரபரப்பு பேட்டி..!



