தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் எந்த பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார்.. இதனால் தவெகவின் பலம் 107 ஆகும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் சேர்ந்தது.. அதன்படி காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவளித்ததால் தவெகவின் பலம் 120ஆக உயர்ந்தது..
இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளவித்தது குறித்து திருமாவளவன் இன்று விளக்கம் அளித்தார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசனை செய்து தான் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம்.. இடதுசாரிகள் போல் நிபந்தனையற்ற ஆதரவு இருக்க வேண்டாம் என்று தான் நானும் வலியுறுத்தினேன்.. அமைச்சரவையில் பங்களிப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் இருந்தது..
மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்திக்க வருகிறார்.. அங்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்.. திமுக, அதிமுக இணைந்து என்னை முதல்வராக்குவதற்கு பேசியதாக எனக்கு தகவல் வந்தது.. தவெக உடன் திரைமறைவில் எந்த வித பேரமும் நடக்கவில்லை.. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இன்னமும் இருக்கிறது.. எதிர்காலம் யோசிக்காமல் பதவிக்காக முடிவெடுக்க முடியாது..
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.. திரைமறைவில் பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.. ஆட்சியில் பங்கு தொடர்பாக தவெக தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை..” என்று தெரிவித்தார்..



