fbpx

2025-ம் ஆண்டு வரை…! 100 விரைவு சக்தி சரக்கு முனையம்.‌.! மத்திய அரசு

2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்

விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வேக்கு சொந்தம் இல்லாத நிலத்தில் சரக்கு முனையங்களை உருவாக்க, அதனை செயல்படுத்துபவர்கள் இடத்தை அடையாளம் கண்டு ஒப்புதலுக்கு பின்னர் முனையத்தை அமைப்பாளர்கள். ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரயில்வே இடத்தில் முனையங்களை உருவாக்க அந்த இடத்தை ரயில்வே அடையாளம் காண வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் மூலம் முனையத்தைக் கட்டி இயக்க ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார்.

Vignesh

Next Post

ஆதார் கார்டில் அதிரடி மாற்றம்..!! பாதுகாப்பா வச்சுக்கோங்க..!! இனி QR ஸ்கேன்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 8 , 2022
விரைவில் ஆதாரில் QR ஸ்கேன் செய்தால்தான் சேவைகள் கிடைக்கும் என்ற நிலை வர இருப்பதாக UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் (யுஐடி) என்பது 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இது நாடு முழுவதும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க உதவுகிறது. சரிபார்ப்பின் நோக்கத்திற்காக சேவை செய்வதைத் தவிர, புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், புதிய சிம் இணைப்புகளைப் பெறவும், ரயில் / பஸ் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் ஆதார் தனிநபருக்கு உதவுகிறது. […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like