தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை எப்போதும் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது.
அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வரவுள்ளதால், இம்மாத தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது.