உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களது வீட்டின் அருகே துளசி என்ற 11 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி துளசி மற்றும் ரூபி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரூபி சிறுமி துளசியின் கருத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரூபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.