சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பாரில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மூதாட்டி லட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றனர். பாதிக்கப்பட்டவர் அலறியதால், அங்குள்ள பொதுமக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து வீராணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஒருவர் மேட்டூர் அருகே உள்ள ஊத்தரன்புத்தாரைச் சேர்ந்த முரளி (29) என்பதும், மற்றொருவர் மன்னார்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் மூதாட்டியை பலாத்காரம் செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வீராணம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.