fbpx

ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம்..!! வங்கிப் பயனர்களே உஷார்..!! உண்மை என்ன..?

தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டும் வைத்திருப்போம். வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்-மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது. 

ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம்..!! வங்கிப் பயனர்களே உஷார்..!! உண்மை என்ன..?

இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று கூறியுள்ளது. மேலும், வங்கி ஏடிஎம்-களில் ஐந்து முறை வரை யாராக இருந்தாலும் இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும் அதனை தாண்டி பணம் எடுக்கும் பட்சத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூபாய் 21 பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம்..!! வங்கிப் பயனர்களே உஷார்..!! உண்மை என்ன..?

எந்த வகையிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம் செய்யப்படாது என்றும் அவ்வாறு வங்கியில் கூடுதல் தொகை பிடித்திருக்கும் பட்சத்தில் வங்கியில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் அல்லது RBI-யிடம் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உலகக்கோப்பையுடன் வரும் வீரர்களை வரவேற்த்த அர்ஜென்டினா மக்கள்....!

Tue Dec 20 , 2022
22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது […]

You May Like