பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
சென்ற 2ம் தேதி ஆரப்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த இருசக்கர வாகனம் திடீரென்று காணாமல் போனது. இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கரிமேடு காவல்துறையில் பாலமுருகன் புகார் வழங்கினார். காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே இருக்கின்ற வேம்பளியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரபு (30), திண்டுக்கல் மாவட்டம் அளவச்சிப்பட்டி பழனிச்சாமி என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (20) உள்ளிட்ட இருவரும் அந்த இருசக்கர வாகனத்தை தேடிச்சென்றனர் என்பது தெரிய வந்தது. ஆகவே காவல்துறையினர் இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.