fbpx

திருச்சி: குடிபோதையில் பெண் மீது கொடூரத் தாக்குதல்.! 2 நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை.!

திருச்சியில் பொது கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த 2 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி, உறையூரில் உள்ள குழுமணி பகுதியில் அமைந்த டாக்கர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் சித்ரகலா (49) உய்யக்கொண்டான் திருமலை வாய்க்கால் பகுதியில் பொதுக் கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வருகிறார். அப்போது குடிபோதையில் இருந்த, டேவிட் மற்றும் சிவசக்தி என்ற இரு நபர்கள், இரும்பு கம்பியால் சித்ரகலாவை பலமாக தாக்கினர்.

அதிர்ச்சி அடைந்த சித்ரகலா வலியால் கத்தித் துடித்தார். மக்கள் வரக்கூடும் என்ற அச்சத்தில் அந்த இருவரும் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த சித்ரகலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அரசு மருத்துவமனையின் சார்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

கோவை MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் அதிரடி..!! முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி..!!

Sat Feb 10 , 2024
கோவையில் MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கோவையில் இயங்கி வரும் MY V3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ரூ.360 முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று பொதுமக்களை ஏமாற்றுவதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் இறுதியில் […]

You May Like