fbpx

#கிருஷ்ணகிரி:பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..!

கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஒன்னக்கரை எனும் கிராமத்தில் கூலி தொழிலாளியான சகாதேவன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் வசித்து வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவன்யாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்னரே மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

சம்பவம் நடைபெற்ற நாளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திடீரென பிறந்த 13 நாட்களிலேயே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Baskar

Next Post

சிறுமியுடன் உல்லாசம்..!! காதலன் போர்வையில் நிர்வாண படத்தை காட்டி மிரட்டல்..!! லட்சங்களை திருடிய சிறுமி..!!

Wed Dec 7 , 2022
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மகள், மிரட்டலுக்கு பயந்து தனது காதலனுக்கு வீட்டிலிருந்து நகை, பணத்தை திருடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் ஆங்கில வழி பள்ளியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளியின் முன் அமான் என்ற நபரை சந்தித்துள்ளார். நட்பாக பேசி, பின்னர் நெருக்கமாக பழகி வந்தனர். அப்படியே நாட்கள் செல்ல நபர் ஒரு நாள் […]

You May Like