உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்திருக்கிறது காவல்துறை. உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் அந்த இளைஞன். பலமுறை சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்து அவனிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. அந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் தினக்கூலிக்கு வேலைக்கு சென்ற நேரத்தில் மற்ற சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த இந்தச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருக்கிறான் அந்த இளைஞன். இச்சம்பவம் அப்பகுதியில் பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான தொடர் வன்புணர்வு சம்பவங்கள் நாடெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது. குறிப்பாக 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் அடிக்கடி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவது நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இச்சம்பவம் மிகவும் வேதனை அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.