fbpx

மொத்தம் 8 கோணிப்பையில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…!

போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நான்கு பேருடன் சென்ற படகினை தடுத்து நிறுத்தினர். இந்த படகு அதிவேகமாக சென்று தப்பிக்க முயற்சி செய்த போது கடலோர காவல்படையினர் அதனை துரத்திச்சென்று பிடித்தனர்.

இந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடியாகும் என்று சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலக பாதுகாப்பு பிரிவின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Vignesh

Next Post

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது இவ்வளவு ஈசியா..!! எளிய டிப்ஸ் இதோ..!!

Wed Nov 23 , 2022
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மின் இணைப்பு எண்ணுடன் […]

You May Like