மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமக்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 1.40 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க கால அவகாசமா நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு சிறப்பு முகாம் டிச.31-ம் தேதியுடன் முடிவதால் கால அவகாசத்தை நீட்டிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்தப்பிறகு அறிவிப்பு வெளியிடப்படும். அதிகபட்சமாக இன்னும் 2 நாட்களில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் செந்தில் தெரிவித்துள்ளார்.