fbpx

67 வயது முதியவரின் சேட்டை.! சிறுமிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு.! போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை புழல் பகுதிக்கு அருகில் உள்ள சக்திவேல் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 67 வயதான இந்த முதியவர் சோபா மெத்தை பழுது நீக்கும் பணி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது வீட்டில் வந்து விளையாடும் சிறுமிகளுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் இவரைப் பற்றி கூறி அழுதுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவங்கள் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை சிறையில் அடைத்திருக்கிறது.

Next Post

காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்.! கைதான கணவன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!

Fri Dec 29 , 2023
ஈரோடு அருகே நகைக்காக திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவியிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சோள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபா. இவர் திமுக வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவரது கணவர் பெயர் தங்கராஜ். இந்த தம்பதியினருக்கு மகனும் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ரூபா […]

You May Like