fbpx

‘நான்-வெஜ்’ புளியோதரை.! பிரபல ஆந்திர கோயிலின் பக்தருக்கு அதிர்ச்சி.!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில், பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. பிரசாதத்தில் எலும்புத் துண்டுகள் இருப்பதை கண்டு கலக்கம் அடைந்தார். கோயிலில் உள்ள இஓ அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஹரிஷ் ரெட்டி என்ற பக்தர் ஒருவர், ஆந்திராவில் இருக்கும் நந்தியால் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று இருந்தார். கோயிலில் தரிசனத்தை முடித்த பின்பு பிரசாதமாக புளியோதரை வழங்கப்பட்டது. அதை வாங்கி உண்ட அவர், அதிர்ச்சியில் உறைந்தார். அதில் எலும்பு துண்டுகள் இருந்ததைக் கண்டார்.

இதையடுத்து உடனடியாக கோவிலில் அமைந்துள்ள இஓ அலுவலகத்தில் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை பதிவு செய்தார். இதுகுறித்து கோயிலின் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “புளியோதரையில் இருந்து எடுக்கப்பட்டது லவங்கப்பட்டையாக இருக்கலாம். பக்தரின் கூற்றுப்படி அது எலும்பாக இருப்பதற்கான சாத்தியம் கிடையாது. இருப்பினும் இது குறித்த விசாரணையை நடத்தி வருகிறோம்” என்று கூறினர். இந்த நான்வெஜ் புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டதை குறித்து அறிந்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Next Post

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்.! சிறப்பு முகாமில் சுமூகமாக முடிந்த சிறப்பு ஆட்சியர் பேச்சுவார்த்தை.!

Wed Feb 14 , 2024
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கடந்த நவம்பர் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதலையான பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர் . சிறப்பு முகாமில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி […]

You May Like