திருவண்ணாமலை அருகே 9 வயது சிறுமியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபரை காவல்துறையினர் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நீலந்தாங்கலை சார்ந்தவர் உத்திரகுமார் இவருக்கு வயது 35. பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி ஒருவரை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளியே சொன்னால் அந்த சிறுமியை கொன்று விடுவதாக மிரட்டி உள்ள அவர் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருக்கிறார். இதனால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறது அந்த சிறுமி.
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கொடுமைகளை பொறுத்துக் கொள்ள இயலாத அந்த நான்காம் வகுப்பு மாணவி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி குற்றம் சாட்டப்பட்ட உத்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒன்பது வயது மாணவியை ஒரு வருடங்களுக்கு தொடர்ந்து மிரட்டி பாலியல் சித்திரவதை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.