fbpx

தொடங்கியது பருவமழை…..! தேங்கிக் கிடந்த மழை நீரை கடக்க முயற்சி செய்தபோது தூக்கி வீசப்பட்ட ஆசிரியர் இறுதியில் நடந்த சோகம்….!

தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்‌ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது.

அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல முயற்சி செய்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தை அவர் பிடித்ததாக தெரிகிறது இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயற்சி செய்த அவரது சகோதரியும் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்துள்ளார். அருகில் இருந்த ஓட்டுனர்கள் சிலர் சாக்ஷியின் 9 வயது மகன் மற்றும் 7 வயது மகளை காப்பாற்றியுள்ளனர்.

அலட்சியம் காரணமாக, உண்டான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக டிசிபி அபூர்வ குப்தா தெரிவித்திருக்கிறார். இதை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Next Post

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய வார்னிங்..!!

Mon Jun 26 , 2023
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 28 முதல் 30ஆம் தேதி […]

You May Like