fbpx

“அநியாயமா கொன்னுட்டாளே…….”! 2 குழந்தையை கள்ளகாதலனின் உதவியோடு கொன்ற கொலைகார தாய்!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது 10 வயது சகோதரன் ஆகியோர் திடீரென காணாமல் போயிருந்தனர் . இதனைத் தொடர்ந்து அவர்களது தந்தை ஷாஹித் பெய்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை அதனைத் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

காவல்துறையின் விசாரணையில் அந்த குழந்தைகளின் தாயாரே அவரது மகனையும் மகளையும் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொடூரமாக கொலை செய்து கால்வாயில் வீசி எறிந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அந்தக் குழந்தைகளின் கொலைகார தாய் அவரது கள்ளக்காதலன் அண்டை வீட்டுக்காரர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஆறு பேரை இதுவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அந்த சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் வீசப்பட்டதாக சொல்லப்பட்ட கால்வாயிலிருந்து இதுவரை உடல் மீட்கப்படவில்லை. சிறுவன் மற்றும் சிறுமியின் உடல்களை காவல்துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

"எனக்கா செய்வினை வைக்கிற......???" மருமகளை போட்டுத் தள்ள முயன்ற மாமனார்!

Sat Mar 25 , 2023
மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்களும் சரிவர கவனிக்காததால் தனிமையிலேயே இருந்திருக்கிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரால் […]

You May Like