கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள குனியமுத்தூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் 40 வயது நிறைந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேலை பார்த்து வருகின்றார்.
பெண் பேராசிரியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் கணவர் இறந்துவிட்டதால், கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை செய்கின்ற பிரதிநிதியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 2-வது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது பற்றி சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேராசிரியர் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகாரினை அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் 2-வது கணவரை கைது செய்துள்ளனர்.