fbpx

மிஸ் பண்ணாதீங்க… வரும் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்… ஆதார்‌ எண்‌ உள்ளிட்டவை கட்டாயம்…! முழு விவரம்…

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி பயல மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டதில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில்‌ ஒரு கல்லூரி மாணவர்‌ விடுதியும்‌, 2 கல்லூரி மாணவியர்‌ விடுதிகளும்‌ மற்றும்‌ காரிமங்கலம்‌ வட்டம்‌, பெரியாம்பட்டியில்‌ ஒரு கல்லூரி மாணவியர்‌ விடுதி என மொத்தம்‌ ஒரு கல்லூரி மாணவர்‌ விடுதியும்‌ மற்றும்‌ 3 கல்லூரி மாணவியர்‌ விடுதிகளும்‌ இயங்கி வருகின்றன.

2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ தாங்கள்‌ படிக்கும்‌ கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதிகளில்‌ தங்கி படிக்கலாம்‌. அவ்வாறு ஆதிதிராவிடர்‌ நல கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில்‌ சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளர்களிடம்‌ பெற்று கொள்ளலாம்‌. விடுதியில்‌ சேர்க்கப்படும்‌ மாணவ, மாணவிகளது பெற்றோரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

விடுதியில்‌ தங்கி படிக்கும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கட்டாயமாக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும்‌. விண்ணப்ப படிவத்தில்‌ கட்டாயம்‌ ஆதார்‌ எண்‌ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்‌. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து, மாணவ, மாணவிகளின்‌ புகைப்படம்‌ ஓட்டி அவ்விண்ணப்பத்தில்‌ அவர்‌ அவர்கள்‌ படிக்கும்‌ கல்வி நிறுவனங்களின்‌ சான்றொப்பம்‌ பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம்‌ நேரில்‌ வழங்க வேண்டும்‌. மேற்படி விடுதிகளில்‌ சேருவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌ வருகின்ற ஆகஸ்டு மாதம்‌ 5-ஆம்‌ தேதி ஆகும்‌. இவ்விடுதிகளில்‌ சேர விரும்பும்‌ தகுதியான கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌ உடன்‌ விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Sat Jul 30 , 2022
தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை கனமழைக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று ; தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like