fbpx

சென்னையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை….! மர்ம நபர்கள் கைவரிசை….!

சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை.

அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அவரை கொலை வெறியுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். அந்த மர்ம நபர்கள் இருவரும் இரு சக்கர வாகன த்தில் வந்து அவரை கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Next Post

”இந்த 2 மாதங்களில் மிகவும் கவனமா இருங்க”..!! இன்ஃப்ளுயன்சா வைரஸ்..!! மத்திய அரசு எச்சரிக்கை..!!

Sun Mar 26 , 2023
உலகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் தங்களது வேலையை இழந்தனர். அதன் பிறகு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா […]

You May Like