டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுக அரசின் ஊழல் மற்றும் சொத்து குறிப்பு குறித்த விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 2ஜி ஊழல் சம்பந்தமான ஆடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் புது புயலை கிளப்பி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் டிஎம்கே பைல் 1 என்ற பெயரில் திமுக கட்சியின் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் சொத்து மற்றும் ஊழல் குறித்த விவரங்களை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனது பாதயாத்திரைக்கு முன்பாக டிஎம்கே பைல்ஸ் 2 என்ற பெயரில் ஆவணம் ஒன்றை தமிழக கவர்னர் ஆர்.என் ரவியிடம் ஒப்படைத்தார்.
Continuation of our exposè of how DMK manipulated the CBI enquiry during the 2G Probe.#DMKFiles3
— K.Annamalai (@annamalai_k) January 17, 2024
Second tape: Conversation between DMK MP & former Min. Thiru A Raja (the prime accused in the 2G case) & MS Jaffar Sait, a former chief of TN State Intelligence.
Witnesses… pic.twitter.com/poHca6EHKO
இந்நிலையில் ‘DMK FILES 3’ என்ற பெயரில் தனது ‘X’ வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த ஆடியோ பதிவில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான ஆர்.ராசா மற்றும் முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட் ஆகியோர் பேசும் ஆடியோ இடம் பெற்று இருக்கிறது . இது குறித்து பதிவு செய்திருக்கும் அவர் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் உரையாக விசாரிக்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் மிரட்டி பணிய வைக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.