ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு சென்ற 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மணிஷ் அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து செய்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து பெண்ணும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் மனிஷ் மறுத்துள்ள நிலையில், ஏமாற்றமடைந்த பெண் காவல் நிலையத்தில் மணிஷ் மீது புகார் அளித்துள்ளார்.
வழக்கானது நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி கூறியதாவது, அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தும், இது போன்ற உறவில் ஈடுபட்டுள்ளார். ஆகையால், இந்த வழக்கை பலாத்கார பிரிவின் கீழ் வாதத்திற்காக அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த வழக்கை கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் திருமணமான பெண்ணை ஒரு ஆணால் கவர்ந்திழுக்க முடியாது. மேலும் இந்த செயலை பலாத்காரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.