fbpx

நீங்கள் இன்னும் ஆதார் – பான் இணைக்கவில்லையா..? அப்படினா இனி சரமாரியாக பணம் பறிபோகும்..!!

செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவுற்றது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன.

அதனை மீண்டும் செயல்படுத்த ரூ.1,000 அபராதம் செலுத்துவதோடு, 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயனாளர்கள் பல முக்கிய பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு, சேமித்து வைத்த பணத்திற்கே கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை திட்டத்தை வைத்திருப்பவராக இருந்து, நீங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததன் காரணமாக உங்களது பான்கார்டு செயலிழந்து இருந்தால், உங்களால் 15GH படிவத்தை இனி சமர்பிக்க முடியாது. இதனால், வழக்கமாக விதிக்கப்படும் டிடிஎஸ் (TDS) ஆன 10 சதவிகிதத்திற்கு பதிலாக 20 சதவிகித டிடிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.

நிரந்தர வைப்புத்தொகை மூலம் ஒரு நிதியாண்டிற்கு ரூ.40 ஆயிரத்திற்கும் அதிகமான வட்டியை வருவாயாக ஈட்டினால், பயனாளர் டிடிஎஸ் செலுத்த வேண்டியது கட்டாயம். உங்களது வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால், 15GH படிவத்தை சமர்பித்து வரிவிலக்கு பெற்று 10% டிடிஎஸ் மட்டும் செலுத்தலாம். ஒருவேளை, உங்களது வங்கிக் கணக்குடன் பான் எண் இணைக்காவிட்டால், 20 சதவிகிதம் அளவிற்கு நீங்கள் டிடிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்நிலையில், எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஆதாருடன் இணைக்கப்படாததால் பான்கார்டு செயல்படாமல் போயிருந்தால், பயனாளர்கள் தங்களது நிரந்தர வைப்புத் தொகைகான டிடிஎஸ்-க்கு விலக்கு அளிக்கக் கோரும் 15GH படிவத்தை சமர்பிக்க முடியாது. அவர்களுக்கு அதிகப்படியான டிடிஎஸ் கட்டணம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

PAN இல்லாமல் FD-ஐ முன்பதிவு செய்வதன் தாக்கங்கள் என்ன?

  • பயனாளருக்கு 20% அளவிற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
  • வருமான வரித்துறையிடமிருந்து டிடிஎஸ் கிரெடிட்ஸ் பெற முடியாது.
  • டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
  • 15GH உள்ளிட்ட பிற வரிவிலக்கு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது/ டிடிஎஸ் அபராதாமும் பொருந்தும்.

Chella

Next Post

’மனைவிக்கு எது சந்தோஷமோ அப்படியே இருக்கட்டும்’..!! கள்ளக்காதலனுக்கு தனது மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்..!!

Sun Jul 9 , 2023
பீகாரில் மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, அப்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் […]

You May Like