சாலை விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினரும், அரசியல் கட்சியின் தலைவர்களும் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் வாகன ஓட்டிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. விளைவு, நாள்தோறும் பல்வேறு விபத்துக்கள் உயிரிழப்புகள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் மதுரை- திருமங்கலம்- விருதுநகர் சாலையில் ஒரு கார் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது மையிட்டான் பட்டி விளக்கு என்ற பகுதியில் அந்த வழியே வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரி அந்த கார் மீது பயங்கரமாக நிலை தடுமாறி மோதியது. இந்த பயங்கர சம்பவத்தில் அந்த கார் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.
இந்த பயங்கர விபத்தில் அந்த காரில் பயணம் செய்த மூன்று பேரும் மற்றும் அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.