fbpx

நிபா வைரஸ் எதிரொலி…! எல்லை மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிர படுத்த கர்நாடகா அரசு உத்தரவு…!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கர்நாடக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான குடகு, தட்சிண கன்னடா, சாம்ராஜநகரா மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடகாவிற்குள் நுழையும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரள மாநிலத்தின் காழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அண்டைய மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 4 நபர்களுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவுவதைத் தடுக்க கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

”காய்ச்சல் வந்தால் அசால்டா இருக்காதீங்க”..!! சிகிச்சையில் இருந்த பயிற்சி மருத்துவர் திடீர் மரணம்..!! திருவாரூரில் சோகம்..!!

Fri Sep 15 , 2023
திருவாரூரில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு […]

You May Like