அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் பெறுவார்கள். இந்த போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.