fbpx

நடிகர் பிரகாஷ் ராஜ் வந்து போன இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர்…! கல்லூரியில் பரபரப்பு….!

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். இவர் வில்லன் மற்றும் நிறைய குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இவரது வில்லன் கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரசித்தி பெற்றது.

நடிகராக மட்டுமல்லாமல், இவர் அரசியலிலும், ஈடுபட்டு வருகின்றார். அடிக்கடி மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவார். இதற்கு பாஜகவினர் மத்தியில், கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை மற்றும் விமர்சனங்களை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்து கொண்டே இருப்பார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில், முற்போக்கு சங்கங்கள் சில சேர்ந்து சினிமா சமுதாயம் எனும் பெயரில், ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இத்தகைய நிலையில், அந்த கல்லூரியில், கருத்தரங்கத்தை நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக, பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த சிலரும், பாஜக பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, கல்லூரிக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கருத்தரங்கம் முடிந்து, பிரகாஷ்ராஜ் கல்லூரியை விட்டு வெளியில் சென்றவுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சிலர், பசுமாட்டு கோமியத்தை வைத்து கருத்தரங்கம் நடந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

Next Post

தென்னை உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மெய்யநாதன்..!! என்ன தெரியுமா..?

Wed Aug 9 , 2023
தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. முன்னதாக, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளின் வகைப்பாட்டின்படி, தென்னை மட்டையில் இருந்து பொருட்கள் தயாரிப்பது “வெள்ளை” பிரிவின் […]

You May Like