fbpx

ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. இறப்பிலும் ஒன்று சேர்ந்த வியப்பின் உச்சகட்ட சோகம்..! 

ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளார். இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊரில் வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.

இவர்கள் இருவரும் ஒன்றாக உருவாகி, ஒன்றாகப் பிறந்து, 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, எங்கேங்கோ வசித்து வந்துள்ளனர். இருந்த போதும், ஒன்றாக ஒரே நேரத்தில் மரணத்தை தழுவியதும், இருவரின் உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது. 

இந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி காவல்துறையினர் கூறுகையில், சுமேர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். சோஹன் எனபவர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜெய்ப்பூரில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சுமேர் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இந்தச் செய்தி அறிந்து வீட்டுக்கு வந்த சோஹன், வியாழக்கிழமை அதிகாலை குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

Baskar

Next Post

இங்கிலாந்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்…! பலியாகும் குழந்தைகள்…

Sat Jan 14 , 2023
இங்கிலாந்தில் பரவி வரும் ஸ்கார்லெட் காய்ச்சலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மர்ம காய்ச்சல் குறித்து தெரிவித்துள்ள UKHSA என்ற அமைப்பு, கடந்த 2022ல் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 54,430 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 20 மடங்கு அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 1953 ஆம் ஆண்டுக்கு பிறகு […]

You May Like